புதுச்சேரி: கிரண்பேடி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை செய்து முடிவெடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். புதுச்சேரியில் 5வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.