புதுடெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீத வரியை உயர்த்தி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும்படி உலக நாடுகளை வலியுறுத்தும் வகையில் மத்திய அரசு வர்த்தக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த ‘வர்த்தக நட்பு நாடு’ அந்தஸ்து நேற்று முன்தினம் வாபஸ் பெறப்பட்டது.