புல்வாமா தாக்குதல் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு தீவிரவாதிகளை முறியடிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.இந்த தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பந்தப்பட்ட தீவிரவாத அமைப்பு மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துவிதமான தீவிரவாத சக்திகளையும், ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு போராடுவதன் மூலமாக மட்டுமே முறியடிக்க முடியும்.

இத்தகைய ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.  உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா 1 கோடி நிவாரணமாக வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: