புல்வாமா: காஷ்மீரின் புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்ந்த இடத்தில் நடைபெற்றுவரும் தடயவியல் ஆய்வில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. கடந்த வியாழனன்று தீவிரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்ட ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து வருகின்றனர். குண்டுவெடிப்பை அரங்கேற்ற செடான் வகை கார் பயன்படுத்தப்பட்டதை கண்டறிந்துள்ள அதிகாரிகள் 60 கிலோ அளவிற்கு ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.