திருத்தணி: திருத்தணி அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெகதீஷ், ஞாதமுனி, மோகன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் ஏற்கனவே சங்கரய்யா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். புது வெங்கடாபுரத்தில் 15 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.