புதுடெல்லி: தென்னிந்தியாவில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கட்டுமான ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி வட மாநிலங்களில் 18 சதவீதமாகவும், மேற்கு மாநிலங்களில் 15 சதவீதமாகவும் உள்ளது. கடந்த ஆண்டில் 67,850 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில இது 77 சதவீத வளர்ச்சி.