சர்வதேச புற்றுநோய் தினம் !!

பிப்ரவரி 4

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, மருத்துவம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, புற்றுநோயால் ஏற்படும் சமூக ஒதுக்கத்தை நீக்குவது, புற்றுநோயை எதிர்த்து போராடுவது போன்றவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் நாள் சர்வதேச புற்றுநோய் தினம் (Word Cancer Day) கடைபிடிக்கப்படுகிறது.

தனி நபர், குடும்பம் மற்றும் சமுதாயத்தின் மீது ஏற்படும் புற்றுநோய் தாக்கத்தின் பளுவைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு மக்கள் அனைவரையும் வலிமைப்படுத்துவதும் இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கமாக உள்ளது. மரபியல் பிறழ்ச்சி போன்ற மரபியல் சார்ந்த காரணிகள், சூழலியல் காரணிகள் அல்லது அறியப்படாத காரணிகளாலும் புற்றுநோய் உருவாகலாம்.

இவற்றில் சிலவற்றைத் தடுக்கலாம், சிலவற்றைத் தடுக்க இயலாது. ஆனால் சில புற்றுநோய்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் புகையிலை, மது போன்ற ஆபத்துக் காரணிகளைத் தவிர்ப்பதன் மூலம் வராமல் தடுக்கலாம். வேதிச்சிகிச்சை, கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன மருத்துவ முன்னேற்றங்களைக் கொண்டு புற்றுநோயைக் குணப்படுத்தலாம். முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், மருத்துவத்தின் மூலம் நோயாளியால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியும்.

தற்போது உலகளவில் புற்றுநோய் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இது அதிகமாகப் பேசப்படும் ஒரு பயங்கரமான நோயாகவும், மரண பயத்தோடு இணைந்த நோயாகவும் கருதப்படுகிறது. புற்றுநோய்க்கு மருத்துவத்தின் மூலம் முழுமையான ஒரு தீர்வு கிடைக்காவிட்டாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் இந்த நோயோடு இணைந்துள்ள சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துக் காரணிகளை நம்மால் குறைக்க முடியும்.

நோய் குறித்த சொந்த அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும். ஆரம்ப கட்ட நோய் கண்டறிதல் மூலம் உரிய சிகிச்சைகள் அளித்து உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: