தனியார் கல்லூரிகள் கட்டண விவகாரம்: நிர்ணயக்குழு அமைப்பை எதிர்த்து வழக்கு

சென்னை: தமிழகத்தில் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுயநிதி வகுப்புகளுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் குழு அமைத்து கடந்தாண்டு ஆகஸ்ட் 31ம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.  இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மதுரை காமராஜர் பல்கலைக்கழக தனியார் கல்லூரிகள் சங்கம் மற்றும் தனியார் கல்லூரிகள் நிர்வாகங்கள் சங்கம் ஆகியவை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், எந்த ஒரு நடைமுறையையும், விதிமுறைகளையும் அறிவிக்காமல் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே கட்டண நிர்ணயக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் தமிழக உயர் கல்வித்துறை செயலாளர், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு ஆகியோர் ஜனவரி 31ம் தேதிக்குள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: