நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில், தேவாலயம், மசூதிகள் விவரத்தை தெரிவிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் காலஅவகாசம்

சென்னை: கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள விநாயகர் கோயிலை அகற்ற கோரியும், அரசு நிலங்கள், பொது சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத்தலங்களை கட்டக் கூடாது என்ற அரசாணையை பின்பற்றும்படி உத்தரவிடக் கோரியும் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2005ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அளித்த உத்தரவில், அரசு புறம்போக்கு நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் சிலர், அங்கு கோயில் கட்டுவதாகவும், இதை இந்து சமய அறநிலையத்துறை ஊக்குவிக்கக் கூடாது.

 எனவே, தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் குறித்த புள்ளிவிவரங்களை  அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஒரு சுற்றறிக்கை தாக்கல் ெசய்யப்பட்டது. அதில், “தலைமைச்செயலாளர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் தமிழகம் முழுவதும்  ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில்கள், தேவாலயம், மசூதி குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது. மேலும், அரசு வக்கீல், நீதிபதியிடம், புள்ளிவிவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

தெய்வங்களாக இருந்தாலும்..

நீதிபதி தன் உத்தரவில், பொதுச் சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள்  கட்டுவதால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எந்த  சூழ்நிலையிலும் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது. தெய்வங்களாக  இருந்தாலும் கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமை இல்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: