அஜ்மீர்: ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்று போலீசாருக்கு ராஜஸ்தான் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.ராஜஸ்தான் காவல் துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘போலீசார் அனைவரும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அஜ்மீர் ஐஜி சஞ்ஜிப் குமார் நர்சாரி கூறுகையில், “போலீசார் தற்போது நல்ல சம்பளம் பெறுகின்றனர். எனவே, அவர்கள் தவறான வழிகளில் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. போலீசார் தங்கள் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கையில் அக்கறை காட்ட வேண்டும்.