அரூர் அருகே மரத்தில் கார் மோதி 3 பேர் பரிதாப சாவு

அரூர்:  தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மேல் பாட்சாபேட்டை பகுதியை சேர்ந்த ஆசாத் மகன் குலாப் (27). கூலி தொழிலாளி. இவர், தேங்காய் வியாபாரியான உறவினர் சலீம் (28), நண்பர் கூலிதொழிலாளி ஏகநாதன் (32) உட்பட 4பேருடன் சமத்துவபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் காரில் சென்று விட்டு இரவு அரூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 11 மணியளவில், புதிய நகர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் கார் மோதியது. இதில், இடிபாட்டில் சிக்கி சலீம், குலாப் ஆகியோரும், தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஏகநாதனும் இறந்தனர். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: