நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஐகோர்ட் உத்தரவுப்படி 2வது கட்டமாக 7 விதிமீறல் கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டன. நாகர்கோவிலில் சுற்றுலா மற்றும் வெளியூர் வாகனங்கள் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதையொட்டி, கடந்த 2013ம் ஆண்டு விதிமீறிய 58 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டன. இந்தநிறுவனங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சீல் வைத்தது சரி எனவும் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளித்திருந்தது. இதைஎதிர்த்து நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. தற்போது, 58 வழக்குடன், புதியதாக 4 வழக்குகள் சேர்த்து என 62 வழக்குகளை வரிசையாக விசாரித்து ஐகோர்ட் தீர்ப்பு அளித்து வருகிறது.