ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஹைமாஸ் விளக்கை இடம் மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊர் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் ஆண்டிபட்டியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குரத்து நெரிசல் அதிகளவில் காணப்படும்.