போக்குவரத்துக்கு இடையூறு ஹைமாஸ் விளக்கை இடம்மாற்ற கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஹைமாஸ் விளக்கை இடம் மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி  பேரூராட்சியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊர் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் ஆண்டிபட்டியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன்  காணப்படும். குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குரத்து நெரிசல் அதிகளவில் காணப்படும்.

இந்நிலையில் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதி முன்புள்ள ஹைமாஸ் விளக்கால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே  ஹைமாஸ் விளக்கை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: