மேற்குவங்கம் முழுவதும் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் தயாரிக்கும் ஆலைகள் பெருகிவிட்டன: அமித்ஷா குற்றச்சாட்டு

மால்டா: மேற்குவங்கம் முழுவதும் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் தயாரிக்கும் ஆலைகள் பெருகிவிட்டன என பாஜக தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தின் மால்டாவில் நடைபெற்று வரும் பாஜக பேரணியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ரவீந்திர சங்கீதம் ஒலித்துக்கொண்டிருந்த மேற்கு வங்கத்தில் இப்பொது வெடிச்சத்தம் தான் கேட்கிறது என்றார். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்தின் இழந்த பெருமையை மீட்டெடுப்போம் என அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: