பொய்குடா: ஒடிசாவில் லாரி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர்.ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், பாலிகுடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் லாரி சென்றுகொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பொய்குடா மலைப் பகுதியில் உள்ள ஒரு வளைவில் திருப்ப முற்பட்டபோது, ஓட்டுனரின் கட்டுபாட்டினை இழந்த லாரி, பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது.