ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி தர உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்

புதுடெல்லி : ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என உத்தரவிடக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்நிலையில் நீதிமன்றம் தடைவிதிக்காத போது ஆலையை திறக்க அரசு அனுமதி தரவில்லை என ஸ்டெர்லைட் நிர்வாகம் இடைக்கால மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு  வர உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: