எடப்பாடி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஊராட்சி சபை கூட்டம் நடத்துகிறோம்: ஸ்டாலின் பேச்சு

கரூர்: எடப்பாடி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் ஈசனத்தத்தில் நடைபெற்றுவரும் ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்று ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் பிரச்சனையை பற்றி அதிமுக அரசு கவலைப்படுவதில்லை. முதல்வர் பதவியை பிடிக்கவே ஓபிஎஸ் யாகம் நடத்தியதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தலைமைச்செயலகத்தில் யாகம் நடத்தியதை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே ஊராட்சிசபை கூட்டம் நடத்தப்படுகிறது. அரசியலுக்காக உங்களை நான் பார்க்க வரவில்லை என்றும் பிரச்சனைகளை கேட்க வந்துள்ளேன் எனவும் ஸ்டாலின் கூறினார். கிராமத்தில் இருந்துதான் தனது அரசியல் பயணம் தொடங்கியது. தற்போதுள்ள சூழலை பார்த்தால் மக்களவை தேர்தலுடன் சட்டமன்றத்துக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது. ஜெயலலிதா பெயரை பயன்படுத்திக்கொண்டு ஏதோ செல்வாக்கு பெற்றதுபோல் அதிமுக ஆட்சி நடத்துவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: