வேளச்சேரி: பெருங்குடி குப்பை கிடங்கில் நேற்று மாலை 5 மணிக்கு, வள்ளுவர் கோட்டம் பகுதியிலிருந்து வந்த ஒரு லாரியில் இருந்து கொட்டப்பட்ட குப்பையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் வலது கை மற்றும் இரண்டு கால்கள் பிளாஸ்டிக் கவரில் சுற்றிய நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குப்பை பொருக்கும் வாலிபர்கள் உடனே பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெண்ணின் உடல் உறுப்புகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த இடத்தில் வேறு ஏதும் உடல் பாகங்கள் உள்ளதா என்று போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வள்ளுவர் கோட்டம் பகுதியில் சமீபத்தில் பெண்கள் யாராவது காணாமல் போனார்களா? என்ற தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி