போதை தகராறில் நண்பனை கொன்றவர் கைது

சென்னை: மது போதை தகராறில் போரூர் சந்தோஷ் நகரை சேர்ந்த மதிவாணன் (45) என்பவரை கடந்த 15ம் தேதி தலையில் கல்லை போட்டு கொலை செய்த அவரது நண்பர் போரூர், ஆர்.இ. நகரை சேர்ந்த அன்புமணி (19) என்பவரை போலீசார் நேற்று  கைது செய்தனர்.

* ராயப்பேட்டை, பாரதி சாலையில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் ஆட்டோவில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த அண்ணாசாலை, பார்டர் தோட்டம், எல்.ஜி.என்.ரோட்டை சேர்ந்த ராஜா (35), தி.நகர், டாக்டர் தாமஸ்ரோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ரஞ்சினி (66) என்பவர் நேற்று மாநகர பஸ்சில் வளசரவாக்கம் வந்தபோது கூட்டத்தில் அவரது ₹10 ஆயிரம் பணத்துடன் மணி பர்ஸை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

* திருவேற்காடு, சக்கரேஸ்வரி நகரை சேர்ந்த கலையரசன் (32) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் ₹10 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டது.

* ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக வேலை பார்த்துவரும் சுஸ்மிதா (25) கடந்த 19ம் தேதி அவரது மொபட்டில் விட்டு சென்ற கைபையை திருடிய சூரப்பட்டு 6வது மேட்டு தெருவை சேர்ந்த சசி (20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* அண்ணனூர் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிய திருமுல்லைவாயல் ஞானவேல் (37), வில்லிவாக்கம் குமரேசன் (25), அதேபகுதி பாரதி நகரை சேர்ந்த ஜானகிராம் (27), ஐ.சி.எப் கார்த்திகேயன் (20), அலெக்ஸ் (23), சுரேஷ் (23), ராஜேஷ் (23) ஆகியோரை திருமுல்லைவாயல் போலீசார் கைது செய்தனர்.

* ஆதம்பாக்கத்தில் பைக்குகளை திருடி வந்த காந்தி நகர் ஏரிக்கரையை  சேர்ந்த சேது (24), மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

* பொன்னேரி அடுத்த கடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கருணானந்தம் (51). என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் காரில் வந்து கொள்ளையடிக்க முயன்றவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை பொன்னேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பூபாலன் (35) எனவும், தப்பி ஓடியவர் குணா என்றும் தெரிவித்தார். மேலும், வீட்டில் ஆள் இல்ைல என்பதை உறுதி செய்த பிறகு, கொள்ளை அடிக்க திட்டமிட்டு பூட்டை உடைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பூபாலனை போலீசார் கைது செய்தனர்.

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

திருவல்லிக்கேணி, சூரப்பா தெருவை சேர்ந்த விஷ்ணு (19), நேற்று முன்தினம் அதிகாலை டாக்டர் பெசன்ட் ரோடு, அங்கமுத்து தெரு சந்திப்பில் சென்றபோது, ஆட்டோ மற்றும் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். அவரை மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆண் சடலம் மீட்பு

தாம்பரம் அடுத்த காமராஜபுரம் ஏரியில் நேற்று மதியம் சடலம் ஒன்று கிடப்பதாக சேலையூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு சுமார் 45 வயதுடைய ஆண் சடலம் கிடந்தது. அதை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார் எதற்காக அங்கு வந்தார் என விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: