தமிழ் நடிகையை நடுரோட்டில் தாக்கி கொள்ளையடித்த கும்பல்: டெல்லியில் துணிகரம்

புதுடெல்லி: பிரபல கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரின் மனைவியும், தமிழ் நடிகையுமான பர்ஹினை நடுரோட்டில் தாக்கி, பணம் மற்றும் செல்போனை கும்பல் கொள்ளையடித்து சென்றது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான மனோஜ் பிரபாகரின் மனைவி பர்ஹின் பிரபாகர். இவர், சென்னையைச் சேர்ந்தவர். 1992ல் ஜான் தேரே நாம் என்ற இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்தார். தமிழில் கமல்ஹாசன் ஜோடியாக கலைஞன் படத்தில் பிந்தியா என்ற பெயரில் நடித்தார். கன்னட, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவரை காதலித்து மணந்தார் மனோஜ் பிரபாகர். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது குடும்பத்துடன் டெல்லியில் வசிக்கிறார்.

இவர் தனது காரில் நேற்று முன்தினம் தெற்கு டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டி மாலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிக்னலில் காரை நிறுத்தியபோது, நான்கு பேர் காரின் ஜன்னலைத் தட்டி, ‘காரை ஏன் தாறுமாறாக ஓட்டுகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த பர்ஹின் அவர்களிடம், காரை தாறுமாறாக ஓட்டவில்லை என கூறினார். வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மொபைல் போன், 16,000 ரூபாய் பணம் உள்பட காரில் இருந்த பொருட்களை அந்த நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் திருடிக்கொண்டு ஓடத் தொடங்கினர். பின்தொடர்ந்து சென்று அவர்களை பிடிக்க முயன்றார் பர்ஹின்.

ஆனால், அந்த நபர்கள் பர்ஹினை கடுமையாக தாக்கிவிட்டு தப்பித்து ஓடி விட்டனர். ஆஸ்துமா நோயால் அவதிப்படும் பர்ஹின், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை ராணுவ அதிகாரி ஒருவர் மீட்டு, வீட்டில் சென்று விட்டுவந்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்

தார். திருடர்களின் கார் எண்ணை வைத்தும் சிசிடிவி மூலமும், அவர் களைக் கண்டறிய போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. தக் தக் என்ற கும்பல்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. வாகனங்களின் ஜன்னலைத் தட்டி உதவி கேட்பதுபோல் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் டெல்லியில் அதிகரித்துள்ளது. அவ்வாறு கொள்ளையடிக்கும் கும்பலை ‘தக் தக் கும்பல் என போலீஸ் அழைக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: