சென்னை: மீஞ்சூர் அடுத்த கவுண்டர்பாளையம் கிராமத்தில் உள்ள சுங்கத்துறை யார்டில் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஒரு மர்ம கும்பல் கன்டெய்னர்களை உடைத்து ரூ.12 லட்சம் மதிப்பிலான 665 கை கடிகாரம், ரூ.3 லட்சம் மதிப்பிலான 26 பேட்டரிகளை சிறிய லாரியில் ஏற்றிக் கொண்டு புறப்பட தயாரானார்கள். அப்போது உள்ளே வந்த காவலாளிகள் கொள்ளையர்களை மடக்கி பிடித்து மீஞ்சூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர், அதே கிராமத்தை சேர்ந்த வேன் டிரைவர் பன்னீர்செல்வம் (40) அவருக்கு உதவி புரிந்த மகேஷ் (42) ஆகியோரை கைது செய்தனர். இருவரிடமிருந்து கை கடிகாரம் மற்றும் பேட்டரிகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.