தம்பியை அடித்ததை தடுத்ததால் பெற்ற மகள் மீது கொதிக்கும் பால் ஊற்றிய கொடூர தந்தை

சென்னை: சூளைமேடு, கருணாநிதிநகர் மேற்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்தவர் கனகா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு  10.15 மணியளவில் தனது தம்பி சந்தோஷ் சாலையில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது தந்தை வெங்கடேசன் தனது மகனை வீட்டுக்குள் வரும்படி அழைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து  சந்தோஷ் விளையாடிக்கொண்டிருந்தபோது குடிபோதையில் இருந்த வெங்கடேசன் சிறுவனை அடித்துள்ளார்.

அப்போது சகோதரனை தந்தை அடிப்பதை கண்ட கனகா தடுத்துள்ளார். எனது மகனை கண்டிக்கும்போது தடுப்பதற்கு நீ யார்? என்று, கூறியுள்ளார். மேலும் ஆத்திரம் அடைந்து வீட்டில் அடுப்பில் கொதிக்க வைத்திருந்த பாலை  எடுத்து கனகாவின் முதுகில் ஊற்றினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு கனகா துடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கனகா  சூளைமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: