சென்னை: சிந்தாதிரிப்பேட்டை, பல்லவன் சாலையில் உள்ள எஸ்.எம் நகரில் வசித்து வருபவர் ஜரீனா பேகம் (33). திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஜரீனா பேகம் சமீபத்தில் அளித்த புகார் மனுவில், தனது உறவுக்கார சிறுமியிடம் அருகில் வசிக்கும் ரவி (51) என்பவர் தவறாக நடக்க முயற்சி செய்ததாககூறி இருந்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது ரவி சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தது உறுதி செய்யப்பட்டது. எனவே போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முதியவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.