சிரியாவில் குண்டு வெடிப்பு தீவிரவாதி கைது

டமாஸ்கஸ்:  சிரியாவில் அரசுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு ேபார் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர்  டமாஸ்கசின் தெற்கு பகுதியில் உள்ள ராணுவ புலனாய்வு அலுவலகம் அருகே நேற்று திடீரென குண்டு ெவடித்தது. இதில் சிலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விவரம்  வெளியாகவில்லை. இது தற்கொலை படை தாக்குதலா அல்லது வெடிகுண்டு வெடித்ததா என உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.இதேபோல் வடக்கு சிரியாவின் ஆப்ரின் பகுதியில் நேற்று நடைபெற்ற மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: