நியூயார்க்: உலக வங்கி தலைவராக இந்திரா நூயியை நியமிக்க வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை சேர்ந்தவர் இந்திரா நூயி. சென்னையில் பிறந்த இவர், பெப்சி உட்பட பல நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகித்துள்ளார். பெப்சியில் 12 ஆண்டு பணியாற்றி தலைமை செயல் அதிகாரியாக ஓய்வு பெற்றார். அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். இந்நிலையில், உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயியை நியமிக்க வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது உலக வங்கி தலைவராக உள்ள ஜிம் யங் கிம் பிப்ரவரி மாதம் இந்த பதவியில் இருந்து விலகி, தனியார் உள்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனத்தில் சேர இருக்கிறார்.