டெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஷ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழு ஆலோசனைக்கு பிறகு அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜூன கார்கே மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பிரதிநிதியான நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.