வீட்டு வசதி வாரிய சின்னத்தை தவறாக பயன்படுத்தி போலி பணி நியமன ஆணை : தமிழக அரசு அறிக்கை

சென்னை,: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அலுவலக சின்னத்தை தவறாக பயன்படுத்தி அதிகாரிகளைப்போல் போலியாக கையொப்பமிட்டு போலியான பணிநியமன ஆணைகளை தயார் செய்து பொதுமக்களை ஏமாற்றும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு போலியான பணிநியமன ஆணைகளை தயார் செய்து தவறான நோக்கில் செயல்பட்ட நபர்கள் மீது காவல் துறையால் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.எனவே, பணி நியமனம் சம்பந்தமாக விவரம் தேவைப்படும் நபர்கள் வாரிய தலைமை அலுவலகத்திற்கு வந்து நேரடியாகவோ அல்லது  கீழ்க்காணும் தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக்கொள்ளுமாறும், வாரியத்திற்கு சம்பந்தமில்லாத வெளி நபர்களை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொலைபேசி எண். 044-24352291, 044-24352029.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: