துபாய் நிறுவனத்திற்கு பணியாளர்கள் தேர்வு

சென்னை: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மை செயலாளர் சுனீல் பாலீவால் வெளியிட்டுள்ள அறிக்கை:துபாயில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய டிப்ளமோ எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் தேர்ச்சி பெற்று மூன்று வருட அனுபவம் அல்லது பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து ஐடிஐயில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் தேர்ச்சியுடன் ஐந்து வருட பணி அனுபவமுள்ள பயர் பைட்டிங் டெக்னீசியன், பயர் அலாரம் டெக்னீசியன் (மாத ஊதியம் ₹19,500- ₹29,000) மற்றும் டீசல் இன்ஜின் மற்றும் எலக்ட்ரிக்கல் பம்ப் டெக்னீசியன் (மாத ஊதியம் ₹29,000-₹38,500)தேவைப்படுகிறார்கள்.35 வயதிற்குட்பட்ட நபர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவச் சான்றிதழ், செல்லத்தக்க பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் omcsfe2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20.12.2018க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: