மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டி

சென்னை: மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டியளித்துள்ளார். காவிரி பிரச்சனை 125 ஆண்டு காலமாக உள்ளது. உபரி நீரை சேமித்து வைக்கவே அணை கட்ட விரும்புகிறோம். கர்நாடகாவும் தமிழ்நாடும் இந்தியா பாகிஸ்தான் அல்ல என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். புதிய அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்க மாட்டோம். 30 ஆண்டாகவே மேகதாது கோரிக்கையை தமிழ்நாட்டிடம் வைத்து வருகிறோம். அணைக்கட்டு இல்லாததால் தமிழகத்தை வரும் காவிரி நீர் பெருமளவு கடலுக்கு செல்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: