வருமான வரித்துறை நடவடிக்கையை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

சென்னை: வருமான வரித்துறை நடவடிக்கையை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வருமான வரி கணக்குகளை மறுஆய்வு செய்ய 2001ல் டிடிவி தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீசை ரத்து செய்யக் கோரி டிடிவி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. சிங்கப்பூர், இங்கிலாந்தில் முதலீடு செய்ததை டிடிவி மறைத்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் அளித்திருந்தது. 16 ஆண்டுகளாக நடந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமான வரித்துறையில் ஆஜராகி டிடிவி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

வருமான வரித் துறை கடந்த 1995-1996 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கு தொடர்பாக விளக்கம் டிடிவி தினகரனுக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில், டிடிவி தினகரன் நடத்திய டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் பெயரில் வெஸ்ட் பேக் லிமிடெட் நிறுவனத்துக்கு முன்பணமாக ஒரு லட்சம் டாலர் கொடுத்தது மற்றும் பான்யன் ட்ரீ நிறுவனத்துக்கு ரூ.11 லட்சம் டாலருக்கான வரைவோலை வழங்கிய விபரங்கள் தொடர்பாக கேட்கப்பட்டிருந்தன. இதற்கு டிடிவி தினகரன் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 1987-1988 ஆம் ஆண்டு முதல் 1997-1998 வரையிலான காலத்துக்கான டிடிவி தினகரனின் கணக்குகளை மீண்டும் ஆய்வு செய்ய உள்ளதாக வருமானவரித்துறை கடந்த 2001 ஆம் ஆண்டு டிடிவி தினகரனுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. வருமான வரித்துறையின் இந்த நோட்டீஸை எதிர்த்து டிடிவி தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு வருமான வரித்துறையினர் விசாரணைக்கு டிடிவி தினகரன் ஒத்துழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: