கின்னஸ் சாதனை படைத்த சேலம் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு

சேலம் : கின்னஸ் சாதனை படைத்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணிக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். உலக கை கழுவும் தினத்தில் 15 லட்சம் பேரை ஒருங்கிணைத்து சேலம் ஆட்சியர் கின்னஸ் சாதனை படைத்தார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி, உலக கை கழுவும் தினமாக ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.சேலம் மாவட்டத்தில் உலக கை கழுவும் தினதன்று கின்னஸ் சாதனை முயற்சியாக ஒரே இடத்தில் 4,200 பேர் கை கழுவினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: