சென்னை : கஜா புயல் பாதித்த இடங்களை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானலில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயலால் திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களின் மேற்கு தாலுகாக்களில்மிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.