புதுச்சேரி : மேகதாது அணை விவகாரத்தில், புதுச்சேரி அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகவும், காவிரி ஆணையம் மற்றும் காவிரி நீர் வாரியத்திற்கு தனித்தனி தலைவரை நியமிக்க கோரி வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக புதுச்சேரி சட்டமன்றத்தில் கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது