நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் செவிலியர் பலி: மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் புகார்!

நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவனையில் செவிலியர் ஒருவர் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உயிரிழந்த செவிலியர் அனுஜா குமாரி ஆவார். இவர் நாகர்கோவில் மாவட்டம் திருவட்டார் அருகே வியனூரை சேர்ந்தவர். நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுஜா அதிகாலையில் 3வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் தள்ளிவிட்டார்களா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

மேலும் மகள் அணிந்திருந்த நகைகள் மாயமாகியிருப்பதால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போது, அனுஜா பணியாற்றி வந்த மருத்துவமனையில் மற்றொரு செவிலியரின் நகையும் திருடு போனதாக புகார் எழுந்துள்ளது. எனவே நகைக்காக கொலை நடைபெற்றதா? என்ற கோணத்தில் நாகர்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: