நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவனையில் செவிலியர் ஒருவர் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உயிரிழந்த செவிலியர் அனுஜா குமாரி ஆவார். இவர் நாகர்கோவில் மாவட்டம் திருவட்டார் அருகே வியனூரை சேர்ந்தவர். நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுஜா அதிகாலையில் 3வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் தள்ளிவிட்டார்களா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.