மேகதாது விஷயத்தில் சட்ட நடவடிக்கையே சிறந்தது: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: ‘’மேகதாது அணை விவகாரத்தில், சட்டப்பூர்வமான நடவடிக்கை மட்டுமே சிறந்த வழி’’ என்று ரஜினிகாந்த் கூறினார். மும்பையில் நேற்று முன்தினம் நடந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் திருமண விழாவில், தனது மனைவி லதாவுடன் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், நேற்று காலை சென்னை திரும்பினார். அப்போது போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அது வருமாறு:மேகதாது அணை கட்டுவதால், தமிழகத்திற்கு தண்ணீர் வருவதில் எந்த  பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

அது எந்தளவுக்கு உண்மை  என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு பாதிப்பு இருக்குமானால், கண்டிப்பாக அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது மட்டுமே இதற்கு சிறந்த வழி.  ரிசர்வ் வங்கி கவர்னர் எதற்காக ராஜினாமா செய்தார் என்ற உண்மை தெரியாமல், அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. நான் அரசியலுக்கு வருவது பற்றி பலமுறை சொல்லிவிட்டேன். இப்போது நடித்துள்ள ‘பேட்ட’ படம் வெளியான பிறகு என் அடுத்த படத்தை பற்றி பேசலாம். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: