கருணாநிதி சிலை திறப்புக்கு வரும் சோனியாவுக்கு காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வரும் சோனியா காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி வரும் 16ம்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்திக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார். இதையடுத்து அவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்க சென்னை வருகிறார். அதை தொடர்ந்து ராயப்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக சோனியாகாந்தி சென்னை வருகிறார். இது தொடர்பாக திருநாவுக்கரசர் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி, விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் அண்ணா அறிவாலயம் வரை மனித சங்கிலி போன்று காங்கிரசார் நின்று அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: