5 மாநில சட்டசபை தேர்தல் தோல்வி எதிரொலி எம்.பி.க்களுடன் மோடி இன்று முக்கிய ஆலோசனை

டெல்லி: பரபரப்பான அரசியில் சூழ்நிலையில் பிரதமர் மோடி இன்று பாஜக எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்து பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. தெலுங்கானாவிலும் மிசோரமிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இத்தேர்தல் முடிவுகள் பாஜக.வுக்கு பெரிய பின்னடைவாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து முக்கிய ஆலோசனை நடக்கிறது. இதேபோல் அடுத்தாண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: