சென்னை: சென்னை அடுத்த மதுராந்தகம் பொலம்பாக்கம் முத்துமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி சுபா (30). இவர், நேற்று முன்தினம் மதுராந்தகம் தனியார் நிறுவனத்தில் நகை அடகு வைத்திருந்தார். அதை மீட்க 1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அரசு பஸ்சில் மதுராந்தகம் வந்தார். மதுராந்தகம் நகரில் இறங்கியதும் தான் பையில் வைத்திருந்த 1 லட்சம் பணம் காணாமல் போனது. சுபா மதுராந்தகம் காவல் நிலையத்திப் புகார் செய்தார். விசாரணையில் சுபா தனது அருகில் இருந்த பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரது கையில் ஒரு தழும்பு இருந்ததாகவும் கூறினார்.