மது பதுக்கி விற்றதை காட்டிக்கொடுத்ததால் மதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை அடுத்த திருப்போரூர் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (54). கல்குவாரி ஊழியர். மதிமுக விவசாய அணி துணை அமைப்பாளர். பூண்டி மற்றும் எடர்குன்றம் கிராமங்களில் நடைபெறும், சட்ட விரோத செயல்கள் குறித்து அவ்வப்போது காவல் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூண்டி மற்றும் ராயமங்கலம் கிராமத்தில் மது பதுக்கி விற்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பிக்கு புகார் செய்ததாக தெரிகிறது. எனவே, மானாம்பதி போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.  

இதனால், ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் கொட்டமேடு கிராமத்தில் இருந்து பைக்கில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.  இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு ஏழுமலைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று காலை அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, மானாம்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: