தாம்பரம்: தாம்பரம் பகுதிகளில், குட்கா பதுக்கிவைத்து விற்கப்பட்டு வருவதாக மாநகர இணை ஆணையரின் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தாம்பரம் அடுத்த மகாலட்சுமி நகர், காமராஜர் தெருவை சேர்ந்த முருகன் (28) என்பவரை பிடித்து விசாரித்ததில் தாம்பரம் ரத்தினமங்கத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் அதிக அளவில் பதுக்கி விற்கப்பட்டு வந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு போலீசார் ரத்தினமங்கம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்து பார்த்தபோது அங்கு 4 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.