திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே கங்காகுளத்தில் ரைஸ் மில் உள்ளது. இங்கு கடந்த 2015ல் பணிபுரிந்த சிறுமியை, உடன் பணிபுரிந்த மும்பை பந்த்ரா பகுதியை சேர்ந்த அபிஷேக் (24) கடத்தி சென்றார். சிறுமியின் குடும்பத்தினர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்கு பதிந்த மகளிர் போலீசார், அபிஷேக்கை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி, சிறுமியை கடத்திய அபிஷேக்கிற்கு 16 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.