மும்பை: கடந்த சில நாளாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஏதோ நான்கு, ஐந்து காசு என்று தான் சரிந்தது. சற்று மதிப்பு கூடும் அளவுக்கு நிலைமை மாறியது. ஆனால், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் திடீரென விலகியதால் ரூபாய் மதிப்பும் பெரும் சரிவு கண்டது.
நேற்று ஒரே நாளில் 110 காசு சரிந்து 72.42 என்று ரூபாய் மதிப்பு காணப்பட்டது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 71.32 என்று இருந்தது. நேற்று ஆரம்பத்தில் இருந்தே ரூபாய் மதிப்பு சற்று தள்ளாடியது. நேற்று முன்தினம் உர்ஜித் ராஜினாமா காரணம் என்றால், நேற்று ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் சந்தையை வெகுவாக பாதித்தது. அதனால் தான் ரூபாய் மதிப்பு 110 காசு சரிந்தது என்று நிதி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.