தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது பற்றி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவேன்: மல்லையா பேட்டி

லண்டன்: அடுத்த நடவடிக்கைகள் பற்றி வழக்கறிஞர்கள் முடிவு செய்வார்கள் என்று மல்லையா பேட்டியளித்துள்ளார். லண்டன் கோர்ட்டின் தீர்ப்பு துரதிஷ்டவசமானது என்றும் மல்லையா செய்தியாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். கோர்ட்டின் தீர்ப்பு பற்றி தனது வழக்கறிஞர்கள் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் வங்கி கடனை திருப்பி செலுத்துவதாக தான் ஏற்கனவே கூறியிருந்தேன் என்று மல்லையா தெரிவித்துள்ளார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என சட்ட நிபுணர்கள் கூறினர் என்றும் மேல் முறையீடு செய்வது பற்றி தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவேன் என்றும் மல்லையா கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: