ஆஸி-க்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

அடிலெய்ட்: அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 235 ரன்னுக்கு சுருண்டது. 15 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதைத் தொடர்ந்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி போட்டியி்ன் கடைசி மற்றும் 5-வது நாளான இன்று உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணி 291 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவிடம் தோல்வியுற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: