ரூ.3 லட்சம் குட்கா சிக்கியது

சென்னை: சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கும்மிடிப்பூண்டு அடுத்த புதுவாயல் பகுதியில் நேற்று முன்தினம் கவரப்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து ஆந்திரா நோக்கி வந்த  ஒரு மினி சரக்கு வேனை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது, அந்த வேன் நிற்காமல் வேகமாக சென்றது.

இதையடுத்து அந்த வேனை போலீசார் துரத்தி சென்று பிடித்து சோதனை செய்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வேனையும் குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரனோடையை சேர்ந்த வேன் டிரைவர் முருகன் (30) என்பவரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: