சென்னைக்கு கடத்திய பெண் கைது ரூ.8 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த மும்தாஜ் (34) என்ற பெண் சுற்றுலாப் பயணியாக துபாய்க்கு சென்று விட்டு திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அவரது உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.

அதில், மும்தாஜின் கைப்பையில் ஒரு ரகசிய அறை வைத்து தைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். ரகசிய அறையை கிழித்து பார்த்தபோது அதில் மேலும் ஒரு கருப்பு டேப் சுற்றப்பட்ட சிறிய பார்சல் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் தங்க செயின்கள் இருந்தன. அதன் மொத்த எடை 260 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.8 லட்சம். தங்க செயின்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் மும்தாஜை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: