சென்னை: தமிழக அரசை கண்டித்து, மகாகவி பாரதி நகரில், அமமுக சார்பில் வரும் 17ம் தேதி உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரி கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போராட்டத்துக்கு அனுமதி மறுத்து சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். சட்டம் - ஒழுங்குக்கு குந்தகம் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என உத்தரவாதம் அளித்து, மனு அளிக்கும் பட்சத்தில் போராட்டத்துக்கு அனுமதியளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.