சென்னை: குழந்தைகள் தினத்தையொட்டி நேற்று சென்னை லிட்டில் பிளவர் பார்வையற்றோர் பள்ளியில் நடந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது: குழந்தைகள் தின விழாவில் நான் குழந்தைகளை வாழ்த்த வரவில்லை. அவர்களிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன். குழந்தைகள் பாடிய பாடல் எனக்கு தெம்பு தருவதாக இருந்தது. நான் செல்லும் பாதையும், பயணமும் இன்னும் வேகமாக இருக்க வேண்டும் என்று சொல்வதாக இருந்தது. 32 வருடங்களுக்கு முன்பு நானும் இந்த பள்ளியில் பாடம் படித்திருக்கிறேன். ராஜபார்வை படத்தில் பார்வையற்றவனாக நடிப்பதற்கு பிரெய்லி எழுத்தையும், சைகை மொழியையும் கற்றேன். அதன் மூலம் நான் ஞானம் பெற்றேன்.