திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் சுற்றுச்சுவரை பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் ஓவியத்தால் அலங்கரித்துள்ளனர். இந்த சிற்பங்கள் காண்போரை கவரும் வகையில் உள்ளது. திருவில்லிபுத்தூரில் உள்ள தேசியநெடுஞ்சாலையில் விருதுநகர் மாவட்ட வனத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர்களில் பறவைகள் மற்றும் விலங்கினங்களின் சிற்பங்களை சிமெண்டால் கேரள தொழிலாளர்கள் வடிவமைத்துள்ளனர். அலுவலக நுழைவுப் பகுதியில் இரண்டு சாம்பல் நிற அணில்களின் உருவமும், சுற்றுச்சுவரில் காட்டெருமை, மான், இருவாச்சி பறவை, கொக்கு, தேவாங்கு, வரையாடு மற்றும் காட்டுப்புறா ஆகியவை தத்ரூபமாக வடிவமக்கப்பட்டுள்ளது.