3 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே ₹3 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பகுதியில் கவரப்பேட்டை போலீசார் நேற்று வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது சென்னையிலிருந்து ஆந்திரா நோக்கி வந்த லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களை தீவிரமாக சோதனை  செய்தனர். அதன்பின் திடீரென அந்த வழியே டாடா மேஜிக் வாகனம்  வேகமாக நிற்காமல் சென்றதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தை துரத்திப் பிடித்து பார்த்தபோது தடைசெய்யப்பட்ட 10 பாக்ஸ் குட்கா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ₹3 லட்சம். அதை ஓட்டி வந்த காரனோடை பகுதியை சேர்ந்த முருகன்(30) என தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குட்கா யாரிடம் பெறப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: